யாழ். கண்டி வீதியில் கோர விபத்து - 7 வயது சிறுமி பரிதாபமாக பலி
யாழ். கண்டி (kandy) வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து யாழ்ப்பாணம் (jaffna) - கண்டி வீதியின் மாரகஹ பகுதியில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் 7 வயது சிறுமி ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நித்திரை கலக்கத்தால் விபத்து
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், முச்சக்கரவண்டி ஒன்று பவுசர் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
முச்சக்கரவண்டி சாரதி, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் பயணித்துள்ளதாகவும் திடீரென முச்சக்கரவண்டி சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தால் இவ்விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே மேற்படி 7 வயது மகள் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
உயிரிழந்தவரின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக ரம்பேவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.