நாளாந்தம் இரத்து செய்யப்படும் 50 தொடருந்து சேவைகள் : காரணம் தெரியுமா...!
பல ஆண்டுகளாக தொடருந்து சாரதிகளுக்கான றெ்றிடங்களை நிரப்பத் தவறியதே தொடருந்து சேவைகள் குறைக்கப்படுவதற்கும் இரத்து செய்யப்படுவதற்கும் முதன்மையாக பங்களித்ததாக தொடருந்து ஓட்டுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலைமை தொடர்ந்தால், தொடருந்து சேவைகளின் செயல்பாட்டில் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று தொடருந்து சாரதிகள் சங்கத்தின் செயலாளர் சந்தன வியந்துவ தெரிவித்தார்.
முன்பு நாளொன்றுக்கு சுமார் 390 தொடருந்து சேவைகள்
முன்பு நாளொன்றுக்கு சுமார் 390 தொடருந்து சேவைகள் இடம்பெற்றன.ஆனால் இன்று 340 சேவைகளாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
தேவைப்படும் 458 தொடருந்து ஓட்டுநர்களில், தற்போது 220 பேர் மட்டுமே இருப்பதாகவும், அதன்படி, 238 ஓட்டுநர்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது, இந்த சூழ்நிலையிலும் கூட, ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட ஓய்வுபெற்ற தொடருந்து ஓட்டுநர்களால் தொடருந்துகள் இயக்கப்படுகின்றன என்றும், ஆண்டுதோறும் ஓட்டுநர்கள் தொடருந்து சேவையில் சேர்க்கப்பட வேண்டும் என்றாலும், 2005 க்குப் பிறகு கடைசியாக புதிய ஆட்சேர்ப்பு 2017 இல் நடந்ததாகவும் அவர் கூறினார்.
நிரந்தர தீர்வு காணப்படாவிட்டால் ஏற்படப்போகும் சிக்கல்
இதற்கு நிரந்தர தீர்வு காணப்படாவிட்டால், தற்காலிக தீர்வுகளைத் தேடுவதற்குப் பதிலாக, எதிர்காலத்தில் மேம்பட்ட தொடருந்து சேவையை எதிர்பார்க்க முடியாது என்று தொடருந்து ஓட்டுநர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
தொடருந்து ஓட்டுநர் சேவையில் சேர்க்கப்படும் ஒருவர் மூன்று வருட பயிற்சியை முடிக்க வேண்டும் என்பதால், இந்த ஆண்டு ஆட்சேர்ப்பு நடத்தப்பட்டாலும், பயிற்சி முடிந்து அந்த நபர் பணியில் சேர்க்கப்படுவதற்கு 2029 ஆண்டுகள் ஆகும் என்றும் ஓட்டுநர்கள் சங்கம் கூறுகிறது.
இது தொடர்பாக தொடருந்து துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், தொடருந்து ஓட்டுநர் வெற்றிடங்கள் மட்டுமல்லாமல் தொழில்நுட்ப மற்றும் பிற தரங்களில் உள்ள வெற்றிடங்களும், என்ஜின் பற்றாக்குறையும் தொடருந்து தாமதங்கள், ரத்து மற்றும் கட்டுப்பாடுகளுக்கு வழிவகுத்ததாகக் கூறினார்.
ஓட்டுநர்கள் பற்றாக்குறை காரணமாக, பல தொடருந்து பாதைகளில் தொடருந்துகள் ரத்து செய்யப்பட்டு, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே இயக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 4 நாட்கள் முன்
