மனித உரிமை பேரவை கரிசனையை மீண்டும் புறந்தள்ளிய சிறிலங்கா

United Nations Sri Lanka
By Beulah Sep 11, 2023 04:21 PM GMT
Report

ஐ.நா மனித உரிமை பேரவை ஆணையாளரின் இலங்கை குறித்த அறிக்கையிடலுக்குப் பின்னர் இந்த அறிக்கைக்கு பதிலளிக்க வேண்டிய நாடு என்ற வகையில் சிறிலங்கா பிரதிநிதி ஹிமாலி அருணதிலக உரையாற்றிய போது வழமை போலவே மனித உரிமை பேரவையின் விமர்சனங்களை நிராகரித்திருந்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 மற்றும் 51/1 ஆகிய தீர்மானங்களை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் நிராகரித்திருந்தது.

சிறிலங்கா பிரதிநிதி ஹிமாலி அருணதிலக ஆற்றிய உரையின் அடிப்படையில்,

பொறுப்புக்கூறலே இலங்கையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் : ஜெனிவா அமர்வில் வலுவான அறிக்கை

பொறுப்புக்கூறலே இலங்கையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் : ஜெனிவா அமர்வில் வலுவான அறிக்கை

துருவப்படுத்தும் முயற்சி

”குறித்த நடவடிக்கை பொறுப்புக்கூறல் தொடர்பான திட்டங்களுக்கு வழிவகுத்திருந்தது. அத்துடன், குறித்த தீர்மானங்களின் எழுத்து மூல அறிக்கைகளையும் அதன் முன்மொழிவுகளையும் நாம் நிராகரிக்கிறோம்.

மனித உரிமை பேரவை கரிசனையை மீண்டும் புறந்தள்ளிய சிறிலங்கா | 54Th Regular Session Human Rights Council Himali

இலங்கையின் உண்மையான நிலை குறித்த தீர்மானங்களில் பிரதிபலிக்கப்படவில்லை. இந்த தீர்மானங்களுக்கு ஆதரவாக சில நாடுகள் வாக்களித்திருந்த நிலையில் சில நிராகரித்திருந்தன.

ஏற்றுக்கொள்ள முடியாத சில காரணங்களை அடிப்படையாக கொண்டு குறித்த நாடுகள் மேற்படி தீர்மானத்தை மேற்கொண்டிருந்தன.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 60/251 தீர்மானங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை உள்ளிட்ட சில முக்கிய விடயங்கள் அமைந்துள்ளன.

இந்த தீர்மானங்கள் இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் துருவப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளன. இந்த தீர்மானங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வரவு செலவு திட்ட தாக்கங்கள் குறித்து பல நாடுகள் விமர்சனங்களை முன்வைத்துள்ளன.

இலங்கை ஆதரவு அளிக்காது

இவ்வாறான விடயங்கள் பயனற்றவை என சிறிலங்கா அரசாங்கம் பல தடவைகள் சுட்டிக்காட்டியிருந்தன.

மனித உரிமை பேரவை கரிசனையை மீண்டும் புறந்தள்ளிய சிறிலங்கா | 54Th Regular Session Human Rights Council Himali

இதனடிப்படையில், இலங்கை குறித்த தீர்மானத்துக்கு ஆதரவளிக்காது. இதனை தவிர்த்த பேரவையின் ஏனைய பயனுள்ள செயல்பாடுகளுக்கு இலங்கை ஆதரவளிக்கும்.

மனித உரிமைகள் தொடர்பான விடயங்களில் உறுதியான முன்னேற்றங்களை அடைய ஸ்ரீலங்கா அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது.

உள்நாட்டு நிறுவனங்கள் ஊடாக குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும். நல்லிணக்கம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் சிறிலங்கா அரசாங்கத்தின் நோக்கம் குறித்தும் அதிபர் ரணில் விக்ரமசிங்க கடந்த ஒகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம்

வடக்கு மற்றும் கிழக்கில் தொடரும் காணி பிரச்சனைகள், அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பிலும் அவர் கூறியிருந்தார்.

மனித உரிமை பேரவை கரிசனையை மீண்டும் புறந்தள்ளிய சிறிலங்கா | 54Th Regular Session Human Rights Council Himali

இந்த விடயங்கள் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஆதரவை பெற்றுக் கொள்ளும் நோக்கில் சர்வகட்சி மாநாடும் நடத்தப்பட்டிருந்தது.

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை முன்னெடுக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் நடைமுறை பாரிய உதவியாக அமைந்துள்ளது.

சுதந்திர உள்நாட்டு பொறிமுறை

சுதந்திர உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான அலுவலகத்தின் செயல்பாடுளில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

மனித உரிமை பேரவை கரிசனையை மீண்டும் புறந்தள்ளிய சிறிலங்கா | 54Th Regular Session Human Rights Council Himali

உண்மை மற்றும் நல்லிணகத்துக்கான பொறிமுறையின் தற்காலிக செயலகம் தற்போது நிறுவப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கை தொடர்பான அறிக்கை தொடர்பில் நாம் முன்வைத்த காரணங்களுக்கு சமமான அவதானம் செலுத்தப்படுமென நம்புகிறோம்.

உள்நாட்டு முன்னுரிமைகள் மற்றும் கொள்கைகள் தொடர்பில் சர்வதேச கடப்பாடுகளுக்கு இணங்க இலங்கை தொடர்ந்து ஐநாவுடன் இணைந்து செயல்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015