ஹோர்முஸ் நீரிணையை இன்று மட்டும் கடந்த 55 கப்பல்கள்
ஹோர்முஸ் நீரிணையில் இன்று(20) வர்த்தகக் கப்பல் போக்குவரத்து அதிகரித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) தெரிவித்துள்ளது.
"இன்று 55 வர்த்தகக் கப்பல்கள் கடந்து சென்றதால், சர்வதேச நீர்வழிப்பாதையில் பாதுகாப்பான பயணம் தடையின்றி தொடர்ந்தது. அவை பெருமளவிலான சரக்குகளையும், 17 மில்லியனுக்கும் அதிகமான பீப்பாய் எண்ணெயையும் உலக சந்தைகளுக்குக் கொண்டு சென்றன," என்று CENTCOM-இன் அறிக்கை தெரிவித்தது.
ஈரானின் அறிவிப்பின் பின்னர் வெளியான தகவல்
ஈரானுடனான ஒப்பந்தத்தின் அனைத்து அம்சங்களும் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, அமெரிக்க இராணுவம் தொடர்ந்து "நிலைகொண்டு விழிப்புடன்" இருப்பதாக அந்த அறிக்கை மேலும் கூறியது.

இதேவேளை லெபனானில் இஸ்ரேலின் "குற்றங்கள்" மற்றும் போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான தனது கடமைகளை அமெரிக்கா மீறியதைக் காரணம் காட்டி, இந்த முக்கிய நீர்வழிப்பாதை மூடப்பட்டதாக ஈரான் அறிவித்த சிறிது நேரத்திலேயே மேற்கண்டஅறிவிப்பு வந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |