போர் நிறுத்த மீறல்! ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவிப்பு
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடப்போவதாக ஈரானின் இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.
லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வருவதாலும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தற்காலிக உடன்படிக்கையின் முதல் பிரிவை அமெரிக்கா செயல்படுத்தத் தவறியதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரானின் ஈரானின் உயர்மட்ட இராணுவத் தலைமையகம் கதம் அல்-அன்பியா அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
போர் நிறுத்த மீறல்
அதில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முதல் விதியைச் செயல்படுத்தாமல் அமெரிக்கா தனது கடமைகளைத் தெளிவாக மீறியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Image Credit: Al Jazeera
அதன்படி, இந்த நேர்மையற்ற தன்மைக்கு எதிராகவும், தெற்கு லெபனானில் இஸ்ரேலால் போர் நிறுத்தம் தொடர்ந்து மீறப்பட்டு வருவதற்குப் பதிலடியாகவும் இந்தக் கப்பல் போக்குவரத்து முடக்கம் அறிவிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
மீண்டும் உயரும் எண்ணெய் விலை
அமெரிக்காவும் ஈரானும் அண்மையில் 14 அம்சங்கள் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டதன் பின்னணியில், கடந்த இரண்டு நாட்களாக ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து வழமைக்கு திரும்பியிருந்தது.

இதன்காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் போர் காலத்தை விடவும் பாரிய வீழ்ச்சியை கண்டிருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடப்போவதாக ஈரான் இராணுவம் அறிவித்துள்ளமை உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையை மீண்டும் அதிகரிக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |