பாம்புகள் வீட்டு பக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்..!
பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள்.அப்படி படையே நடுங்கும் பாம்புகள் வீட்டிற்குள் வந்தால் என்ன செய்வது..! அலறியடித்து ஓட வேண்டியதுதான். இவ்வாறு நாள்தோறும் ஓட முடியுமா..!
இந்த படையே நடுங்கும் பாம்பிற்கு சில செடிகளைப் பார்த்தால் நடுக்கம் ஏற்பட்டுவிடும்.. அந்த செடிகள் எல்லாம் கிடைப்பதற்கு மிக அரிய செடிகளும் இல்லை. மிக எளிமையாக கிடைக்கும் செடிகள் தான்.இவற்றை வீட்டில் வளர்த்தால் பாம்பு வீட்டு பக்கமே எட்டிப்பார்க்காது.
பாம்பையே நடுங்க வைக்கும் அந்த வெடிகள் என்னவென்று பார்க்கலாம்.
செவ்வந்தி
முன்பெல்லாம் வீட்டுக்கு ஒரு செடியாவது இந்த செவ்வந்தி பூ செடியை வைத்திருப்பார்கள். இதை ஆங்கிலத்தில் mariegold என்று அழைப்பார்கள். இந்த செடிகளில் இருந்து வரும் வித்தியாசமான வாசனை பாம்புக்கு பிடிக்காது. இதிலிருந்து வரும் வாசனையால் பாம்புகள் ஓடிவிடும்.
லெமன்கிராஸ் செடி
லெமன் கிராஸ் என்பது ஒரு புல் வகை செடியாகும். இதன் இலை மற்றும் வேர்களில் இருந்து தான் லெமன்கிராஸ் எசன்ஷியல் ஓயில் தயார் செய்யப்படுகிறது. வீட்டின் மாடியிலோ அல்லது வாசல் பகுதிக்கு அருகிலோ இந்த செடியை வைத்து வளர்க்கலாம். இதன் வாசனை மிக கடுமையாக இருக்கும். இந்த வாசனைக்காக சில கிலோ மீட்டர் வரைக்கும் பாம்புகள் நடமாட்டம் இருக்காது.
ஸ்நேக் பிளாண்ட் (Snake Plant)
ஸ்நேக் பிளாண்ட் என்றால் அது பாம்புகளை ஈர்க்கும் என்று நினைக்க வேண்டாம். அது பாம்புகளை அண்ட விடாமல் தடுக்கும். பல வீடுகளில் அழகுக்காக உள்ளக தாவரமாக இந்த ஸ்நேக் பிளாண்டை வளர்ப்பார்கள். இதை செடி நிறைய ஒக்சிஜனைக் கொடுப்பது மட்டுமல்ல பாம்புகளிடம் இருந்து வீட்டுக்கு பாதுகாப்பும் கொடுக்கும்.
ரோஸ்மேரி செடிகள்
ரோஸ்மேரி தலைமுடி வளர்ச்சி முதல் வாசனை திரவியங்கள் வரை பல்வேறு விஷயங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. மிகக்கடுமையான வாசனை வீசக்கூடிய தாவரம் இது. இதை அழகு சாதனப் பொருள்கள் மற்றும் ஹேர் ஓயில் ஆகியவற்றில் இது பயன்படுத்தப்படுகிறது. மசாஜ் தெரபி மற்றும் உணவுகளுக்கு ஃபிளேவர்களை கூட்டவும் பயன்படும். இந்த ரோஸ்மேரி செடியின் கடுமையான வாசனைக்கும் பாம்புகள் எட்டிப் பார்க்காது.
கற்றாழை
நாம் சருமத்துக்கும் தலைமுடிக்கும் சோற்றுக் கற்றாழை என்று சொல்லப்படுகிற முள் கற்றாழை பாம்புகளை அண்ட விடாமல் தடுக்கும். இந்த கற்றாழையை வளர்க்க நிறைய தண்ணீரோ பராமரிப்போ தேவையில்லை. வெப்பத்தைத் தாங்கி மாதக்கணக்கில் கூட தண்ணீர் ஊற்றாமல் வளர்க்க முடியும். இந்த கற்றாழை செடியை வீட்டின் வாசல் மற்றும் கொல்லைப்புறத்தில் நட்டு விடுங்கள். பாம்புகள் வர நடுங்கும்.
துளசி
துளசி செடி வெறும் புனிதச் செடி மற்றும் மூலிகை செடி மட்டுமல்ல, அது வாசனை வீசக்கூடிய தாவரமுமாகும். எந்த மதசார்பும் இல்லாமல் எல்லா வீடுகளிலும் வைத்து வளர்க்க வேண்டிய செடி. இதன் வாசனைக்கும் பாம்புகள் வராது. வீட்டுக்கு ஒரு துளசி செடியாவது வளர்ப்பது நல்லது.
எனவே மேற்கண்ட ஆறு வகையான செடிகளையும் அல்லது அவற்றில் ஏதேனும் ஒன்றையோ வீட்டில் வைத்து வளர்த்து வந்தால் வீடும் வாசனையாக இருக்கும். நல்ல ஒக்சிஜனும் கிடைக்கும். அதோடு பாம்பு தொல்லையும் உங்கள் வீட்டைச் சுற்றி இருக்கவே இருக்காது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
