ஈழத்தமிழர்களின் கரிநாள் : தமிழர் பிரதேசத்தில் வெடித்த மாபெரும் போராட்டம்

Jaffna Kilinochchi Anura Kumara Dissanayaka S. Sritharan SL Protest
By Shalini Balachandran Feb 04, 2025 10:30 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

இலங்கையின் (Srilanka) சுதந்திரம் தினம் தமிழர்களின் கரிநாள் என்கின்ற கோஷத்தின் அடிப்படையில் கிளிநொச்சியில் பாரிய மக்கள் போராட்டமொன்று  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த போராட்டடமானது இன்று (4.2.2025) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி (Klinochchi) கந்தசுவாமி கோயில் முன்றலில் ஆரம்பமாகிய போராட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்று கொண்டிருக்கின்றது.

யாழ். மாவட்ட செயலகத்தில் 77 ஆவது சுதந்திரதின நிகழ்வுகள்!

யாழ். மாவட்ட செயலகத்தில் 77 ஆவது சுதந்திரதின நிகழ்வுகள்!

ஈழத்தமிழர்களின் கரிநாள் 

போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam), சிவஞானம் சிறீதரன் (S. Shritharan), முன்னாள், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் (Selvaraja Gajendran), காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் (Rathanasingam Muralitharan) உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அத்தோடு, எங்கே எமது உறவுகள் எங்கே, வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்., எமது நிலம் எமக்கு வேண்டும் மற்றும் வெளியேறு வெளியேறு இராணுவமே வெளியேறு என பாரிய கோஷங்களை எழுப்பிய வண்ணம் மக்கள் போராட்டத்தை மக்கள் முன்னெடுத்து வருகின்றது.


பின்வரும் விடயங்களை கோரிக்கைகளை முன்வைத்து நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

1. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதி வேண்டும்.

2. தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

3. பௌத்த மயமாக்கல் உடனே நிறுத்தப்பட வேண்டும்.

4. தமிழர் தாயக பிரதேசத்தில் தொடர்ச்சியாக நடந்து வரும் நில அபகரிப்பு உடனே நிறுத்தப்பட வேண்டும்.

5. தாயக வளத்தை அபகரிப்பது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

6. தமிழர் தாயக பிரதேசத்தில் இருந்து இராணுவம் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும்

7. தமிழின படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும்

8. சிவில் செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்துதல்கள் நிறுத்தப்பட வேண்டும்.

9. ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவது நிறுத்தப்பட வேண்டும்.

10 எமது நிலம் எமக்கு வேண்டும்.

11. தாயகம், தேசியம், அரசியல் சுயநிரணயம் என்பன எமது உரிமைகள். அவற்றை உடனே அங்கீகரிக்க வேண்டும்

12. வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் என்பது அங்கீகரிக்கப்பட வேண்டும்.

13 சர்வதேசம் வட்டுக்கோட்டை தீர்மானத்தை அங்கீகரிக்க வேண்டும்.

14 எமது தலைவிதியை நாமே தீர்மானிக்க சர்வதேச நியமங்களுக்கு அமைய எமது தாயக பிரதேசத்தில் பொது வாக்கெடுப்பு நடத்துமாறு சர்வதேசத்தை கோருகிறோம்.

உச்சம் தொட்ட முச்சக்கர வண்டி - மோட்டார் சைக்கிள் விலைகள்

உச்சம் தொட்ட முச்சக்கர வண்டி - மோட்டார் சைக்கிள் விலைகள்

விரைவில் கோட்டாபய ராஜபக்ச கைது - அம்பலப்படுத்திய கம்மன்பில

விரைவில் கோட்டாபய ராஜபக்ச கைது - அம்பலப்படுத்திய கம்மன்பில

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026