இந்தோனேஷியா நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழப்பு
earthquake
8-killed
By Vasanth
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 8 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு ஜாவா மாகாணத்தில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த மாகாணத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள மலாங் நகரை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் தாக்கியது.
ரிக்டர் அளவுகோலில் 6.0 புள்ளிகளாக பதிவான இந்த பயங்கர நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 82 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின் போது வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.
இதன் காரணமாக பீதியடைந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி