தமிழர் பகுதியில் மீட்கப்பட்ட பல இலட்சம் பெறுமதியான தங்க நகைகள்
வவுனியாவில் (Vavuniya) 80 இலட்சம் பெறுமதியான 35 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா - கொக்குவெளி பகுதியில் வைத்து நேற்று (04) மாலை குறித்த நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பாக வவுனியா கணேசபுரம் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து 35 பவுண் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டிருந்தது.
தங்க நகைகள் மீட்பு
குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக வவுனியா நெளுக்குளம் காவல்துறை பொறுப்பதிகாரி டி.எம்.ஏ.சமரகோன் தலைமையிலான குழுவினரால் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலை கொக்குவெளி பகுதியில் வைத்து 29 வயது இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளதுடன், அவரிடம் இருந்து 35 பவுண் தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நெளுக்குளம் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன் இன்றையதினம் (05) குறித்த சந்தேக நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


