மே மாதத்தில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்
இந்த ஆண்டு மே மாதத்தின் முதல் 18 நாட்களில் 80,421 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த மாதத்தின் குறிப்பிட்ட நாட்களில் 27,036 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து (India) வருகை தந்துள்ளனர்.
இந்திய சுற்றுலாப்பயணிகள்
இது மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 33.6 சதவீதம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய இராச்சியத்திலிருந்து (USA) 5,486 பேரும், ஜேர்மனியிலிருந்து 5,164 பேரும், சீனாவிலிருந்து 5,189 பேரும், பங்களாதேஷில் இருந்து 3,863 பேரும் வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில், மே மாதத்திற்கான அண்மைய புள்ளிவிபரங்களின் படி, 2025 ஆம் ஆண்டில் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 977,305 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில், 184,095 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், 109,675 பேர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் மற்றும் 92,539 பேர் பிரித்தானியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
