கறுப்புப் பணத்தின் சொர்க்கமாக சுவிஸ் வங்கி! இந்தியாவைச் சென்றடைந்தது மூன்றாவது பட்டியல்
சுவிஸ் நாட்டில் உள்ள வங்கிகளில் முதலீடு செய்துள்ளவர்களின் 3ஆவது பட்டியலை இந்தியாவிடம் சுவிஸ் ஒப்படைத்துள்ளது என இந்திய ஊடகமொனன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான சுவிஸிலுள்ள வங்கிகள் கறுப்பு பணத்தை பதுக்குவோரின் சொர்க்கமாக திகழ்கின்றன.
ஆனாலும் கறுப்பு பணத்தை மீட்க தொடர் நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுவிஸ் அரசுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
சுவிஸ்சுடன் தானியங்கி தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் அடிப்படையில், சுவிட்சர்லாந்து வங்கிகளில் முதலீடு செய்துள்ளவர்களின் விபரங்களை, அந்தந்த நாடுகளிடம் சுவிட்சர்லாந்து ஒப்படைத்து வருகிறது.
அதன்படி, சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் முதல் பட்டியல், கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழங்கப்பட்டது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இரண்டாவது பட்டியல் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.