இராணுவ வீரர்களுடன் விபத்துக்குள்ளான பேருந்து: 22 பேர் வைத்தியசாலையில்..!
Sri Lanka Army
Sri Lanka Police
Sri Lankan Peoples
By Dhilak
நிட்டம்புவ (Nittambuwa) - கிரிந்திவெல வீதியில் மணமால வளைவில் இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்து எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் 22 வீரர்கள் காயமடைந்து வத்துபிட்டிவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
காயமடைந்தவர்களில் பேருந்தின் சாரதியும் அடங்குவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்நிலையில், சிகிச்கை பெற்று வந்த 20 வீரர்கள் வீடு திரும்பியுள்ளதுடன், சாரதி மற்றும் ஒரு ராணுவ வீரர் இன்னும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

அத்துடன், விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கிரிந்திவெல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
You may like this...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி