அமெரிக்காவிற்கு படுதோல்வி : ரஷ்யா பகிரங்க அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வோஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே இரண்டு வார கால போர் நிறுத்தத்தை அறிவித்த நிலையில், ஈரானுக்கு எதிரான "ஒற்றைப் பாதை, ஆக்கிரமிப்பு, தூண்டுதலற்ற தாக்குதல்" அணுகுமுறை "படுதோல்வி" அடைந்துள்ளது என்று ரஷ்யா இன்று(08)புதன்கிழமை தெரிவித்துள்ளது.
"மேலும் ஆக்ரோஷமாக இருப்பது, மேலும் தாக்குதல் நடத்துவது, சமூக ஊடகங்களில் அதிகமாக எழுதுவது மற்றும் 'வெற்றி' - இவை அனைத்தும் மிக அருகில் உள்ளன என்பது போன்ற அனைத்து அறிக்கைகளும் மீண்டும் ஒருமுறை படுதோல்வி அடைந்துள்ளன.
தாக்குதல் அணுகுமுறை படுதோல்வி
அத்தகைய ஒற்றைப் பாதை, ஆக்கிரமிப்பு, தூண்டுதலற்ற தாக்குதல் அணுகுமுறையும் அவ்வாறே தோல்வியடைந்துள்ளது," என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா, ஸ்புட்னிக் வானொலிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

மேலும் ஜகரோவா கூறுகையில், ஈரானுக்கு எதிரான "ஆக்கிரமிப்பை" உடனடியாக நிறுத்தி, "உண்மையான அரசியல் மற்றும் இராஜதந்திரத் தீர்வை" தொடங்க வேண்டியதன் அவசியத்தையும், இந்தச் சூழ்நிலைக்கு இராணுவத் தீர்வு சாத்தியமில்லை என்பதையும் ரஷ்யா ஆரம்பத்திலிருந்தே கூறி வந்துள்ளது என்றார்.
"ஈரான் மீதான குண்டுவீச்சு மற்றும் தாக்குதலை இரண்டு வார காலத்திற்கு நிறுத்தி வைக்க" ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் செவ்வாயன்று(07) அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |