கொழும்பில் வெளிநாட்டுப் பெண்ணுக்கு பேருந்தில் மோசமான அனுபவம்: வெளியான காணொளி
இலங்கைக்கு வெளிநாட்டிலிருந்து சுற்றுலா வந்த பெண்ணொருவரிடம் பேருந்தில் நபர் ஒருவர் தவறாக நடந்து கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த வெளிநாட்டு பெண், கொழும்பில் (Colombo) தனியார் பேருந்து ஒன்றில் பயணிக்கும் போது சில்லறை வியாபாரி ஒருவர் அருகில் அமர்ந்து அப்பெண்ணிடம் தவறான முறையில் நடந்து கொண்டுள்ளார்.
இதன்போது, குறித்த பெண் அங்கிருந்தவர்களிடம் தெரிவித்ததையடுத்து பேருந்து நடத்துநர் உள்ளிட்டவர்கள் அந்த நபரை வேறு இருக்கையில் அமர வைத்துள்ளனர்.
மீண்டும் பின்தொடர்ந்தார்
பின்னர், அந்த பெண் பேருந்தில் இருந்து இறங்கி காலிமுகத்திடல் கடற்கரைக்கு சென்றுள்ள நிலையில் குறித்த நபர் அங்கும் பின் தொடர்ந்து சென்றுள்ளார்.
இதன்போது மிகவும் அச்சமடைந்த பெண், அங்கிருந்தவர்களிடம் கூறிய நிலையில் அவர்கள் அந்த சில்லறை லியாபாரியை வெளியேற்றியுள்ளனர்.
இச்சம்பவங்களை குறித்த வெளிநாட்டு பெண், “இலங்கை பேருந்தில் கிடைத்த மிக மோசமான அனுபவம்” எனக் குறிப்பிட்டு காணொளியாக அவரது சமூக ஊடக பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
அத்துடன், இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இனிமேல் மிக கவனமாக இருக்குமாறும் குறித்த பெண் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
