மகிந்த தலைமையில் விரைவில் புதிய அரசாங்கம் -வெளியானது அறிவிப்பு
Mahindananda Aluthgamage
Mahinda Rajapaksa
Namal Rajapaksa
By Sumithiran
மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசாங்கம்
மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் நாட்டின் நெருக்கடிகள் முடிவுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்ஷ தலைமையில் கூட்டம்
கண்டியில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.