பேனா வடிவிலான துப்பாக்கியுடன் இருவர் கைது
Sri Lanka Police
STF
Gampaha
By Jaso
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பேனா வடிவிலான சிறிய ரக துப்பாக்கியை வைத்திருந்ததாக கூறப்படும் நபர் ஒருவரும் அந்த துப்பாக்கியின் உரிமையாளரும் கம்பஹா யக்கல பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கி 9 மீ. எம். வெடிமருந்துகளைப் பயன்படுத்தக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
துப்பாக்கியுடன் சந்தேக நபர்கள் கைது
விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி, சிரேஷ்ட பிரதிகாவல்துறை மா அதிபர் வருண ஜயசுந்தரவின் விசேட அறிவுறுத்தலின் பேரில், இராஜகிரிய முகாமின் காவல்துறை விசேட அதிரடிப்படையின் நிலைய பொறுப்பதிகாரி பிரதம காவல்துறை பரிசோதகர் நடிக சில்வாவினால் இந்த துப்பாக்கியுடன் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்...
5 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி