மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம் : காவல்துறையின் காவலில் இருந்த இளைஞன் படுகொலை..!

Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation
By Sumithiran May 21, 2024 06:41 PM GMT
Report

 பேலியகொட(peliyagoda) குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இளைஞன் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

சம்பவத்தில் மினுவாங்கொடை, ஹொரம்பல்ல, வெரகொடமுல்ல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மோட்டார் சைக்கிள் திருத்துவதற்காக

குறித்த இளைஞன் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்வதற்காக மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையத்திற்குச் சென்றுள்ளார் . சென்றவர் மறு நாள் காலை வரை வீடு திரும்பவில்லை என்பதால் அவரது தந்தை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் .

மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம் : காவல்துறையின் காவலில் இருந்த இளைஞன் படுகொலை..! | A Youth In Police Custody Was Murdered

முறைப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் இளைஞன் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர் . எனினும் பின்னர், இந்த இளைஞன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக பேலியகொட காவல்துறையிடமிருந்து தகவல் கிடைத்துள்ளதாக மினுவாங்கொடை காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .

சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இளைஞனின் தந்தைக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டபோது தனது மகன் அலைபேசியில் அழும் சத்தம் கேட்டதாக தந்தை தெரிவித்துள்ளார்.

காவல்துறையின் அறிவிப்பு

இதனையடுத்து கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி சட்டத்தரணி ஒருவருடன் உயிரிழந்த இளைஞனின் உறவினர் ஒருவர் காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். ஏப்ரல் 25 ஆம் திகதி இளைஞன் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் எனவும் இவர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம் : காவல்துறையின் காவலில் இருந்த இளைஞன் படுகொலை..! | A Youth In Police Custody Was Murdered

இதேவேளை , சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞனின் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு தந்தை கோரியபோது நீதிமன்றில் முற்படுத்திய பின்னர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கவுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பலஸ்தீன அகதி முகாம் மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல் : மருத்துவர்,ஆசிரியர் உட்பட பலர் பலி

பலஸ்தீன அகதி முகாம் மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல் : மருத்துவர்,ஆசிரியர் உட்பட பலர் பலி

ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக

எனினும், அவரது உடல் நிலை ஆபத்தான நிலையிலிருந்ததால் இளைஞனைக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதனைதொடர்ந்து இளைஞனை வைத்தியசாலையில் அனுமதித்தபோது வைத்தியர்கள் இளைஞனைப் பரிசோதித்த போது இவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர் .

மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம் : காவல்துறையின் காவலில் இருந்த இளைஞன் படுகொலை..! | A Youth In Police Custody Was Murdered

அத்துடன் இளைஞனின் மரணத்தின் பின்னர் இவர் தொடர்பில் மினுவாங்கொடை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்ட சில உண்மைகள் பொய்யானவை என தந்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

மாணவனை காணவில்லை : தவிக்கும் உறவுகள்

மாணவனை காணவில்லை : தவிக்கும் உறவுகள்

பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவின் விசாரணை அதிகாரிகளின் கொடூரமான தாக்குதல்களினால் இளைஞன் உயிரிழந்துள்ளதாக இளைஞனின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

 பிரதி காவல்துறை மா அதிபரின் அறிவிப்பு

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு இந்த விடயம் தொடர்பிலான உண்மைகள் கண்டறியப்படும் என பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ(Nihal Talduwa) தெரிவித்துள்ளார்.

மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம் : காவல்துறையின் காவலில் இருந்த இளைஞன் படுகொலை..! | A Youth In Police Custody Was Murdered

அதேவேளை கடந்த காலத்தில் யாழ்ப்பாணம்(jaffna) சுன்னாகம் காவல்துறையின் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024