யாழில் தவாறான முறைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி: மூவர் அதிரடி கைது!
Jaffna
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dilakshan
வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் 14 வயது சிறுமியை தவறான முறைக்கு உட்படுத்திய மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையானது, வட்டுக்கோட்டை காவல்துறையினரால் இன்று (26) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சிறுமி நீண்ட காலமாக இவ்வாறு தவறான முறைக்கு உட்படுத்தபட்டு வந்துள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சட்ட நடவடிக்கை
இதன்படி, பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி