கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து - 23 பேர் காயம்
By Thulsi
பேருந்தும் ஒன்றும் கொள்கலன் லொறி ஒன்றும் மோதி பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து இன்று (18) காலை இரத்தினபுரி - கொழும்பு பிரதான வீதி - மீன்னான பகுதியில் இடம்பெற்றுள்ளது.
காவல்துறை விசாரணை
விபத்துக்குப் பிறகு கொழும்பு - இரத்தினபுரி பிரதான வீதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்தில் காயமடைந்த சுமார் 23 பேர் எஹெலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் நிலைமை மோசமாக இல்லை என்பதுடன், விபத்து குறித்து எஹெலியகொட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

