றீ(ச்)ஷாவில் உண்மையில் நடந்தது என்ன...! விரைவில் அம்பலமாகும் CCTV காணொளிகள்
கிளிநொச்சி - இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் அண்மையில் நடைபெற்ற உணவுத்திருவிழா குறித்த கருத்துக்கள்தான் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
றீ(ச்)ஷாவில் நடைபெற்ற அட்சய பாத்திரம் உணவுத் திருவிழாவில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்ட நெரிசல் மற்றும் எதிர்பார்க்காத அசம்பாவிதங்கள் காரணமாக நிகழ்வு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
இதன்போது குறிப்பிட்ட பெண்ணொருவர் நிறுவனத்தின் உரிமையாளரை அழைக்குமாறும் உணவு வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தும் கோபமான வார்த்தைகளை வெளிப்படுத்தி கருத்துக்களை வெளியிட்ட காணொளி ஒன்று பெரிதும் பகிரப்பட்டது.
இந்தநிலையில் குறித்த பெண்ணின் கருத்துக்கு முக்கிய சிசிரிவி காணொளிகளுடன் விரைவில் பதிலளிக்கப்படும் என றீ(ச்)ஷா நிறுவனத்தின் உரிமையாளர் கந்தையா பாஸ்கரன் (Baskaran Kandiah) தனது தரப்பு கருத்தை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த கருத்துக்களை கீழுள்ள காணொளியில் காணலாம்....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |