யாழில் கோர விபத்து - பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவர் பலி
சங்கானை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் யாழ் (Jaffna) - சங்கானை பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள வளைவில் இடம்பெற்றுள்ளது.
மாதகல் மேற்கு, மாதகல் பகுதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை உலகேந்திரம் (வயது 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலை
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நேற்றையதினம் இன்னொருவரையும் ஏற்றியவாறு சங்கானையில் இருந்து சித்தங்கேணி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார்.
இதன்போது சங்கானை பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள வளைவில் முன்னால் சென்ற முச்சக்கர வண்டியை முந்தி செல்ல முற்பட்டவேளை எதிரே வந்த பட்டா ரக வாகனம் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
பின்னர் இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு (Jaffna Teaching Hospital) கொண்டு செல்லப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த நபர் நேற்றையதினம் உயிரிழந்தார்.
மரண விசாரணை
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
மற்றைய நபர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலும், விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை மானிப்பாய் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
