முக்கிய கோப்புகள் மாயம்: குழப்பத்தில் பிரதமர் ஹரிணி!
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் பிரதமர் அலுவலகத்தின் கீழ் இயங்கிய ஊழல் எதிர்ப்பு குழு அலுவலகத்திலிருந்து பல கோப்புகள் காணாமல் போயுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
நேற்றைய நாடாளுமன்றில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதமர், முறைப்பாடு பதிவுகள் மற்றும் குழுவின் உறுப்பினர் ஒருவர் சம்பந்தப்பட்ட விபத்து தொடர்பான கோப்புகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கணக்கில் வரவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க 2022 இல் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றபோது அவற்றை அகற்றினாரா என்பதும் தங்களுக்கு தெரியாது என பிரதமர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை ஒப்புதல்
ஊழல் எதிர்ப்பு குழு 2015 இல் அமைச்சரவை ஒப்புதலுடன் நிறுவப்பட்டதாக தெரிவித்த பிரதமர் ஹரிணி, அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க அதன் தலைவராக பணியாற்றியதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் அமைச்சர் ஆனந்த விஜேபாலவுடன் குழுவின் உறுப்பினராக இருந்தனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
