தமிழர் தலைநகரில் கோர விபத்து... ஸ்தலத்திலேயே இருவர் பலி!
திருகோணமலை- கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீதியின் 98ஆம் கட்டை சந்தியை அண்மித்த பகுதியில் இந்த விபத்து நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளது.
மூதூர் வலயக் கல்வி அலுவலகத்துக்கு சொந்தமான கெப் ரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளது.
இருவர் உயிரிழப்பு
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த இருவரும் வயது 48 மற்றும் 50 வயது மதிக்கத்தக்கவர்கள் எனவும் ஒருவர் 5ம் கட்டை பகுதியை சேர்ந்தவர் என்றும் மற்றவர் கல்மெடியாவ வடக்கு பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரியவருகிறது.
குறித்த வீதியின் அருகே உள்ள வயல் வெளி வீதி ஊடாக வீட்டுக்கு செல்வதற்கு மோட்டார் சைக்கிளை திருப்ப முற்பட்ட வேலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
காவல்துறையினர் விசாரணை
விபத்துடன் தொடர்புடைய சாரதியை தம்பலகாமம் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில் உயிரிழந்த இருவரின் சடலங்களும் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
