இந்தியாவிற்கு தப்பிச்செல்ல முயன்ற மூவர் அதிரடி கைது!
புதிய இணைப்பு
யாழ்ப்பாணத்தில் (Jaffna) பல்வேறு குற்றச்செயல்கள் புரிந்த மூவர் நேற்றிரவு (21) தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த குறித்த மூவரும் யாழ்ப்பாணம், கோப்பாய், பருத்தித்துறை மற்றும் அச்சுவேலி ஆகிய காவல்துறை பிரிவுகளில் இடம்பெற்ற கொலை, கொள்ளை, வாள்வெட்டு ஆகிய குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
தலைமன்னார் காவல் நிலையம்
இவர்கள் மூவரும் இலங்கை - தலைமன்னாரில் இருந்து கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயற்சித்தவேளை கடலில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளானர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் தலைமன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை தலைமன்னார் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
யாழில் பெண் உள்ளிட்ட இருவர் அதிரடி கைது!
யாழ்ப்பாணத்தில் (Jaffna) ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது நாவாந்துறை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரையும் இளைஞன் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காவல்துறையினர் விசாரணை
கைது செய்யப்பட்ட இருவரிடமும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர்களிடம் இருந்து 440 மில்லி கிராம் ஐஸ் போதை பொருளை மீட்டுள்ளனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இருவரையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
