இஷாரா செவ்வந்திக்கு தங்குமிடம் வழங்கிய பெக்கோ சமனின் தாயார் : அம்பலமான தகவல்
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த பெக்கோ சமனின் தாயார், மிதெனியா - உலஹிதியாவ பகுதியில் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உடந்தையாக இருந்தமைக்காக கைது செய்யப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்திக்கு கொலைக்குப் பின்னர் பெக்கோ சமனின் தாயார் தங்குமிடம் வழங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
அத்துடன் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்காக இஷாரா செவ்வந்திக்கு யாழ்ப்பாணத்திற்குப் பயண வசதிகளைச் செய்து கொடுத்தவரும் பெக்கோ சமனே என குறிப்பிடப்படுகின்றது.
காவல்துறை சந்தேகம்
இந்தநிலையில், கணேமுல்ல சஞ்சீவவுக்கு விசுவாசமான கரந்தெனிய சுத்தா கும்பலால் அவரது தாயார் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பின்னர், இஷாரா செவ்வந்தி மாத்தறை மற்றும் வவுனியாவில் தங்கியிருந்ததாகவும், பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து படகு மூலம் இந்தியாவிற்குத் தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை பெக்கோ சமனின் தாயைக் கொலை செய்வதற்காக துப்பாக்கிதாரிகள் வந்ததாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள், நேற்று காலை (13) மாத்தறை ஊருபொக்க பகுதியில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்படி, கைரேகை பதிவு செய்யும் அதிகாரிகளும், தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து இவ்விடயம் குறித்து விசாரணையை ஆரம்பித்தனர்.
துப்பாக்கிச் சூடு
நேற்று முன்தினம் (12) மதியம் மித்தெனியா - உலாஹிதியாவா பகுதியில் தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்த பெக்கோ சமனின் தாயாரை, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் 9 மில்லி மீற்றர் துப்பாக்கியால் குறிவைத்து சுட்டனர்.

இந்தோனேசியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கெஹெல்பத்ர பத்மேவுடன் கைது செய்யப்பட்டு இந்த நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட பெக்கோ சமன், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அருணா விதானகமகே என்ற மித்தெனியே கஜ்ஜா மற்றும் அவரது இரண்டு குழந்தைகளின் கொலையிலும் பெக்கோ சமன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், மித்தெனியாவின் ஜுலம்பிட்டிய பகுதியில், முன்னதாக பெக்கோ சமன் மற்றும் பிறருடன் கைது செய்யப்பட்ட தம்பரி லஹிருவின் வீடு, கடந்த மாதம் 8ஆம் திகதி சிலரால் தீக்கிரையாக்கப்பட்டது.
வீட்டிற்குத் தீ வைக்கப்பட்டபோது தம்பரி லஹிருவின் தாயார் அங்கிருந்ததாகவும், தீ விபத்தில் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |