பொலநறுவையில் கோர விபத்து - சமூக சேவையாளர் ஒருவர் பலி
பொலன்னறுவை - வெலிக்கந்த காவல்துறை பிரிவுக்குட்பட்ட செவனப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வாகனத்தில் பயணித்த மேலும் இருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (29) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
தம்பிலுவில் தம்பட்டை பகுதியைச் சேர்ந்த சமூக சேவையாளரும் அம்பாறை மாவட்ட இணையத்தின் தவிசாளரும், அக்கறைப்பற்று சுவாட் அமைப்பின் தலைவருமான வடிவேல் பரமசிங்கம் என்பவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மேலும், விபத்தில் காயமடைந்த இருவரும் வெலிக்கந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தில் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை வெலிக்கந்த காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

