யாழில் குளிக்க சென்றவருக்கு நேர்ந்த அவலம்!
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By pavan
யாழ்ப்பாணம் வரணி குடம்பியன் பிரதேச குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்றைய தினம் (01) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நீராட சென்ற மூவரில் ஒருவரே நீரில் மூழ்கிய நிலையில் இன்று பிரதேச மக்களினால் சடலமாக மீட்கப்பட்டார்.
மேலதிக விசாரணை
37 வயதுடைய மகாலிங்கம் மணிவண்ணன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணையை யாழ் கொடிகாமம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.