தொடருந்து விபத்தில் சிக்கிய பல்கலை மாணவன்!
Accident
By pavan
கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் தொடருந்து விபத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (17) காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து நிலையத்தில் வைத்து மருதானையிலிருந்து மொரட்டுவை நோக்கி பயணித்த தொடருந்தில் மோதி அவர் உயிரிழந்துள்ளார்.
பல்கலை மாணவன்
24 வயதான களுத்துறை வடக்கில் வசித்து வந்த பல்கலைக்கழக மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி