யாழ்ப்பாணத்தில் கோர விபத்து..! ஒருவர் பலி! ஒருவர் கவலைக்கிடம்
இரண்டாம் இணைப்பு
யாழ்.தாவடி பகுதியில் இன்று மாலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஹயஸ் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு இளைஞர் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருதனார்மடம் பகுதியிலிருந்து கொக்குவில் நோக்கி 3 மோட்டார் சைக்கிள்கள் மிகை வேகத்தில் பயணித்ததாகவும் அதில் இரண்டாவதாக வந்த மோட்டார் சைக்கிள் யாழ்ப்பாணத்திலிருத்து மருனார்மடம் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் யாழ்.ஓட்டுமடம் பகுதியைச் சேர்ந்த அனுஜன் (வயது 19) என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் ஜெயசீலன் ரகுசான் (வயது 17) என்ற இளைஞன் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்த இளைஞனுக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக சுன்னாகம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் தாவடி சந்திக்கு அருகியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலத்த காயங்களுக்குள்ளாகியிருப்பாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று மாலை மோட்டார் சைக்கிளும் - வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இருவர் கவலைக்கிடம்
குறித்த விபத்தில் இரு இளைஞர்களும் எதிர்திசையில் வெகு தூரம் தூக்கி எறியப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகியதுடன் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளும், வானும் பலத்த சேதத்திற்கு உள்ளாகிய நிலையில் சம்பவ இடத்தில் காணப்படுகின்றது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



