ஆரம்பமானது வேட்டை- சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பதை நிரூபித்த தலிபான்கள்!
காபூல் விமானநிலயத்திற்குள் நுழைய முற்பட்ட பெண்களையும் குழந்தைகளையும் சவுக்கு மற்றும் கூர்மையான ஆயுதங்களால் தலிபான்கள் தாக்கியதில், இரத்தம் சொட்டச் சொட்ட குழந்தைகள் கதறியழுது கொண்டு நிற்பதையும், பெண்கள் விழுந்து கிடப்பதையும் காட்டும் படங்கள் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியள்ளன.
மேலும், முன்னர் அரசாங்க ஊழியர்களாக இருந்தவர்கள், ஆப்கன் இராணுவத்துடன் பணியாற்றியவர்கள் ஆகியோரை தாலிபான்கள் வீடு வீடாகச் சென்று சுற்றி வளைத்து பிடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன், 12 முதல் 45 வயது வரையுள்ள பெண்கள், திருமணமாகாத பெண்கள், விதவைகள் ஆகியோரை பாலியல் அடிமைகளாக அல்லது தாலிபான்களுக்கு மனைவிகளாக ஆக்கிக்கொள்வதற்காக வீடு வீடாகச் சென்று வேட்டையாடத் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியுள்ள நிலையில், தாங்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோல் இருக்கமாட்டோம், பெண்களுக்கு சம உரிமை கொடுப்போம் என்று நேற்றைய தினம் தாலிபான்களின் செய்தித் தொடர்பாளர் பேட்டியளித்திருந்தார். ஆனால், அவர் அளித்த வாக்குறுதி எல்லாம் சிறிது நேரத்திலேயே காணாமல் போய்விட்டது.
நேற்றே பெண்களும் குழந்தைகளும் சவுக்கால் அடிபட்டு இரத்தம் சொட்டச் சொட்ட விழுந்து கிடப்பதைக் காட்டும் படங்கள் வெளியாகி அவர்களது எதிர்காலம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
அ்ந்த செய்தியாளர் சந்திப்பின் போது தலிபான் செய்தித்தொடர்பாளர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
தாலிபான்கள் 20 ஆண்டுகளுக்கு முன் இருந்தது போல இப்போது இருக்க மாட்டோம், அப்போது பெண்கள் பொது இடங்களில் சவுக்காலடிக்கப்பட்டார்கள், மக்கள் முன்னிலையில் கல்லெறிந்து கொல்லப்பட்டார்கள், அவர்களுக்கு அலுவலக வேலையும், மருத்துவ உதவியும், கல்வியும் மறுக்கப்பட்டது.
வயதான ஒரு ஆண் உதவியின்றி பெண்கள் வீட்டை விட்டு வெளியே போக தடை விதிக்கப்பட்டிருந்தது. இனி அப்படி இருக்காது, மேலும் இனி பெண்கள் ஹிஜாப் அணிந்தால் போதும், புர்கா கூட அணியத்தேவையில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் ஷாரியா சட்டத்தின் கீழ் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள உரிமைகள் வழங்கப்படும். அவர்கள் எங்கள் தோளோடு தோளாக நின்று பணியாற்றப்போகிறார்கள், எனவே அவர்களுக்கு பாரபட்சம் காட்டப்படாது என சர்வதேச சமுதாயத்துக்கு உறுதி அளிக்கிறோம் எனவும் தெரிவித்ததிருந்தார்.
ஆனால், அவர் செய்தியாளர் சந்திப்பை நடத்திய அன்றே தாலிபான்கள் சொன்னது வேறு செய்வது வேறு என நிரூபித்துள்ளனர். தாலிபான்கள் சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பது ஒரே நாளில் தெரியவந்துள்ளதால், ஆப்கானிஸ்தான் மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகத்தான் உள்ளது எனவும் சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.