தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போர் மறக்கப்பட வேண்டும்: சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளர்

Sri Lankan Tamils Tamils Mullivaikal Remembrance Day
By Eunice Ruth May 18, 2024 10:44 AM GMT
Eunice Ruth

Eunice Ruth

in இலங்கை
Report

இலங்கையில் (Sri Lanka)தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போர் மறக்கப்பட வேண்டும் எனும் நிலைப்பாட்டில் சிறிலங்கா அரசாங்கம் செயல்படுவதாக சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கேலமார்ட் (Agnès Callamard) சுட்டிக்காட்டியுள்ளார்.

தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் தொடர்ந்தும் சிறிலங்கா அரசாங்கத்தில் முறைப்பாடுகளை மேற்கொள்வதோடு சர்வதேச சமூகத்தில் இந்த விடயம் பேசுபொருளாக இருப்பதை உறுதி செய்ய வேண்டியது குடிசார் சமூகம், ஊடகங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தாய்மாரினது கடமை என அவர் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே, அக்னஸ் கேலமார்ட் இதனை தெரிவித்துள்ளார்.

உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் மண்: அஞ்சலி செலுத்திய சர்வதேச மன்னிப்புச்சபை செயலாளர் நாயகம்

உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் மண்: அஞ்சலி செலுத்திய சர்வதேச மன்னிப்புச்சபை செயலாளர் நாயகம்

சர்வதேசத்தின் கவனம்

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “சர்வதேச நிகழ்ச்சி நிரலில் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது. இதனை வெளிக்காட்டுவதற்காகவே நாம் இங்கு வந்துள்ளோம்.

தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போர் மறக்கப்பட வேண்டும்: சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளர் | Agnes Callamard Tribute At Mullivaikal Civil War

உக்ரைன்-ரஷ்ய போர், இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக இலங்கை மீதான சர்வதேசத்தின் கவனம் திரும்பவில்லை. எனது இலங்கைக்கான பயணத்தின் மூலம், தமிழர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்பதை சர்வதேச சமூகத்துக்கு நான் நினைவூட்ட விரும்புகின்றேன்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க இலங்கை தவறியுள்ளது. மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர். இதனால் சர்வதேச சமூகம் இந்த மக்களுக்கான நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும். உண்மையில் என்ன நடந்தது என்பதை வெளிக்காட்டுவதற்கான அர்த்தமுள்ள விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

சிறிலங்கா அரசாங்கம்

மனித உரிமைகள் பேரவையில் பல நாடுகள் இலங்கை தொடர்பான தீர்மானங்களை முன்வைத்துள்ளனர். ஐ.நா மனித உரிமைகள் பேரவை மற்றும் அலுவலகம் இலங்கை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போர் மறக்கப்பட வேண்டும்: சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளர் | Agnes Callamard Tribute At Mullivaikal Civil War

அறிக்கைகளையும் சமர்ப்பிக்கிறது. பொறுப்புக்கூறலை நோக்கமாக கொண்டு நாம் இந்த அறிக்கைகளை அவதானிக்கிறோம். ஐ.நாவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இலங்கையின் ஆதரவு மிக முக்கியம்.

சிறிலங்கா அரசாங்கத்தின் ஆதரவின்றி நீதி மற்றும் சமாதானத்துக்கான எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்க முடியாது” என தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்களுக்கு நினைவுகூருவதற்கு கூட உரிமை இல்லை: அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டு

தமிழ் மக்களுக்கு நினைவுகூருவதற்கு கூட உரிமை இல்லை: அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டு

வெள்ளவத்தையில் நினைவேந்தலில் ஈடுபட்டவர் கைது

வெள்ளவத்தையில் நினைவேந்தலில் ஈடுபட்டவர் கைது

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024