நிலநடுக்கத்தின் கோர தாண்டவம் - வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனம்
வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் தலைநகர் கராகஸில் கட்டிடங்கள் தரைமட்டமாகி பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் அவசரநிலையை அறிவித்துள்ளார்.
மக்கள் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று இடைக்கால ஜனாதிபதி அரசு தொலைக்காட்சியில் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
100,000 இறப்பு எண்ணிக்கை
சேதமடைந்த கட்டிடங்களிலிருந்து வெளியேறுமாறு ரோட்ரிக்ஸ் குடிமக்களை வலியுறுத்தினார். காயங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த எந்தத் தகவலையும் ரோட்ரிக்ஸ் வழங்கவில்லை.

நிலநடுக்கத்தால், வெனிசுலா தலைநகர் கராகஸில் உள்ள விமான நிலையத்தில் கான்கிரீட் மேற்கூரைகளும் False Ceiling-களும் இடிந்து விழுந்துள்ளதால், நாட்டின் பிரதான விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊகடங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் வெனிசுலாவில் இடம்பெற்ற பாரிய நிலநடுக்கங்களின் தாக்கத்தால் இறப்பு எண்ணிக்கை 100,000-ஐத் தாண்டக்கூடும் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மதிப்பிட்டுள்ளது.
ஒரே நிமிடத்தில் மாறிவிட்டது
வெனிசுலா நாட்டில் புதன்கிழமை மாலை அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பெரும் பேரழிவையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.

முதலில் நாட்டின் 7.2 ரிக்டரில் பதிவான நிலநடுக்கம் தாக்கிய சில வினாடிகளிலேயே, தலைநகர் கராகஸை 7.5 ரிக்டர் அளவிலான மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது.
வெறும் 39 வினாடிகள் இடைவெளியில் ஏற்பட்ட இந்த இரட்டை நிலநடுக்கங்களால் தலைநகரம் முழுவதும் பெரும் பீதியும் குழப்பமும் நிலவியது.
இந்த நிலநடுக்கத்தின் கோரத் தாண்டவம் குறித்து கராகஸ் நகரைச் சேர்ந்த 54 வயதான வங்கி ஊழியர் ஓடலிஸ் எஸ்கலோனா கூறுகையில், "எல்லாமே ஒரே நிமிடத்தில் மாறிவிட்டது. படிக்கட்டுகள் சரிந்து விழுந்தன.
சுவர்கள் முழுவதும் விரிசல் ஏற்பட்டு மேற்கூரையில் இருந்த பொருட்கள் அனைத்தும் கீழே விழுந்தன. அது மிகவும் பயங்கரமாக இருந்தது" என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 1 மணி நேரம் முன்