உக்ரைனில் பள்ளி மீது வான்வழி தாக்குதல் 60 பேர் பலி
கிழக்கு உக்ரைனிலுள்ள லுகான்ஸ் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதில் 60 பேர் உயிரிழந்திருக்க கூடும் என லுகான்ஸ்க் ஆளுநர் செர்கீ கைடாய் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா மேற்கொண்டுள்ள போரால் லட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
பெண்கள், குழந்தைகள் என பொதுமக்கள் மற்றும் இராணுவ வீரர்கள் பலரும் போரில் கொல்லப்பட்டுள்ளனர்.
அந்நாட்டின் பல நகரங்களில் உள்ள குடியிருப்புகள், கட்டிடங்கள் குண்டுவீச்சுகளால் சேதமடைந்துள்ளன.
போரானது நீண்ட காலத்திற்கு தொடரும் என கூறப்படுகிறது. இதனால், சொந்த நாட்டிலேயே உக்ரைனியர்கள் அகதிகளாக வாழ கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த போரில் கிழக்கு உக்ரைனில் உள்ள லுகான்ஸ் பகுதியில் பிலோகோரிவ்கா கிராமத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் அந்த பாடசாலை முற்றிலும் சேதமடைந்தது என லுகான்ஸ்க் ஆளுநர் செர்கீ கைடாய் தெரிவித்துள்ளார்.
வெடிகுண்டுகள் வீசப்பட்டபோது, அந்த பாடசாலையில் மொத்தம் 90 பேர் இருந்துள்ளனர்.
அவர்களில் 27 பேர் மீட்கப்பட்டனர் என்றும் மேலும் அப் பாடசாலையிலிருந்த 60 பேர் உயிரிழந்திருக்க கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
