சொன்னதைச் செய்து காட்டிய மத்திய வங்கி ஆளுநர்! வெளிவராத இரகசியம்?
மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணய செலவாணி கையிருப்பு இன்று 3.1 பில்லியன் அமெரிக்க டொலரை அடைந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் (Ajith Nivard Cabraal) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் உத்தியோக பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் தனது பதிவில்,
ஏற்கனவே தாம் அறிவித்தப்படி அதிகாரபூர்வமாக இந்த கையிருப்பை அடைய முடிந்திருத்திருக்கின்றது.
அதேநேரம் இந்த தொகையை 2021ஆம் ஆண்டு முடியும் வரையில் தங்கவைத்துக்கொள்ள முடியும் என தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக டொலருக்கான பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடியினை சந்தித்துள்ள நிலையில் கடந்த சில சில தினங்களுக்கு முன்னர் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இந்த ஆண்டு இறுதிக்குள் டொலருக்கான கையிருப்பு உயர்வடையும் என்றும் ஆனால் அதற்கான இரகசியத்தை வெளியிட் மாட்டோம் என்றும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
In keeping with our previous announcements, the official #reserve position of the @CBSL has today reached appox USD 3.1 billion and will remain around that level by end 2021 as well. #RoadMap #SriLanka #GoSL
