லஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலையாக தவறிய ஐ.தே.கவின் முக்கிய புள்ளி! வெளியிடப்பட்ட அறிவிப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் லஞ்ச ஆணைக்குழுவால் தனக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டும் முன்னிலையாக தவறியதாக வெளியான செய்திகளை முற்றாக மறுத்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்திற்கு ஊழியர்களை நியமித்து, அவர்களை அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியது குறித்து விசாரிப்பதற்காக அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், லஞ்ச ஆணைக்குழுவிடமிருந்து தனது வீட்டிற்கு எந்த அழைப்பாணைக் கடிதமோ அல்லது தொலைபேசி அழைப்போ வரவில்லை என அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
தூய்மையான அரசியல்
ஆணைக்குழுவிடமிருந்து அழைப்பாணை வரும்போதெல்லாம் அங்கு செல்லத் தயாராக இருப்பதாகக் கூறிய அவர், சட்டத்திடமிருந்து ஒளிந்துகொள்ள வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, வரலாறு நெடுகிலும் தான் தூய்மையான அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும், நாட்டிற்குச் சேவை செய்துள்ளதாகவும், தொடர்ந்து சேவை செய்வேன் என்றும் காரியவசம் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
4 நாட்கள் முன்