எங்கு ஓடினாலும் எத்தனை காலம் ஆனாலும் விடமாட்டோம் - பைடன் சூளுரை
எத்தனை காலம் ஆனாலும் விடமாட்டோம்
எத்தனை காலம் ஆனாலும் விடமாட்டோம்; எங்கு ஓடினாலும் தப்ப முடியாது என்று அல் கொய்தா அமைப்பின் தலைவர் அய்மான் அல்- ஜவாஹிரி கொல்லப்பட்டது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அல்-கொய்தா அமைப்பின் நிறுவுனர் ஒசாமா பின்லேடன் 2011ல் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டார். அதன்பின் அந்த அமைப்பை வழிநடத்தி வந்தார் அல்- ஜவாஹிரி.
இவர் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்து தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்.
ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது அவர்,
அழிக்கும் நடவடிக்கைக்கு அனுமதி
"அல் ஜவாஹிரி பதுங்கியிருக்கும் இடத்தை அறிந்துவிட்டதாக தகவல் வந்ததும். அவரை அழிக்கும் நடவடிக்கைக்கு நான் அனுமதி கொடுத்தேன். அல் ஜவாஹிரி கொல்லப்பட்டதால் அமெரிக்காவில் செப்ரெம்பர் 11ல் நடந்த தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 3000 பேரின் குடும்பங்களுக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
