இலங்கையில் மது பயன்பாட்டை விடவும் அதனாலேற்படும் சுகாதார செலவுகள் மிக அதிகம்
இலங்கையில் மது பயன்பாட்டுடன் தொடர்புடைய சுகாதார மற்றும் பொருளாதாரச் செலவுகள் 2025 ஆம் ஆண்டில் ரூ. 335 பில்லியனாக இருந்தது. இது, அதே ஆண்டில் மது வரிகள் மூலம் வருவாயாக வசூலிக்கப்பட்ட ரூ. 254 பில்லியனை விட கணிசமாக அதிகரிப்பு என தெரியவந்துள்ளது.
மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) வழங்கிய தரவுகளின்படி, மேற்கண்ட விடயம் தெரியவந்துள்ளது.
மது பயன்பாட்டுடன் தொடர்புடைய செலவுகள்
2025 ஆம் ஆண்டில் மது வரி மூலம் ஈட்டப்பட்ட வருவாயை விட, மது பயன்பாட்டுடன் தொடர்புடைய செலவுகள் ஏறக்குறைய ரூ. 81 பில்லியன் அதிகமாக இருந்தன என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

தரவுகளின்படி, ரூ. 335 பில்லியன் சுகாதார மற்றும் பொருளாதாரச் செலவுகள் என்பது அதே ஆண்டில் மது பயன்பாட்டினால் ஏற்பட்ட தாக்கத்தைக் குறிக்கிறது, அதேசமயம் ரூ. 254 பில்லியன் என்பது அந்தக் காலகட்டத்தில் மது வரிகள் மூலம் ஈட்டப்பட்ட வருவாயைக் குறிக்கிறது.
ஆய்வில் வெளியான தகவல்
இந்தத் தரவுகள் இலங்கை மத்திய வங்கி, இலங்கை கலால் வரித் திணைக்களம், சுகாதார அமைச்சு மற்றும் மூவெண்டி இன்டர்நஷனல், யுஎன்டிபி மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றின் பங்களிப்புடன் நடத்தப்பட்ட 'இலங்கையில் மது கட்டுப்பாட்டின் சுகாதார மற்றும் பொருளாதாரத் தாக்கங்கள்' என்ற தலைப்பிலான ஆய்வு ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டன.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |