ரணிலால் தீர்வினைக் காண முடியும்: டக்ளஸ் நம்பிக்கை (படங்கள்)

Election Commission of Sri Lanka Douglas Devananda Ranil Wickremesinghe Wickremesinghe Ranil Election
By Shadhu Shanker Nov 03, 2023 05:37 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

நாடு எதிர்கொள்ளுகின்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் தீர்வினைக் காண முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் தேர்தல்கள் நடைபெறுகின்றபோது, மக்கள் தங்களின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவார்களாயின், தொடர்ந்து வருகின்ற ஐந்து வருடங்களில் நாடு சுபீட்சமான நிலையை அடையும் எனவும் தெரிவித்துள்ளார்.

சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியில் நேற்று (03) நடைபெற்ற நிறுவனர் ப.செபராஜாசிங்கம் நினைவுதினம் மற்றும் பரிசளிப்பு விழாவின் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரணிலால் தீர்வினைக் காண முடியும்: டக்ளஸ் நம்பிக்கை (படங்கள்) | All Problems Can Be Solved By Ranil Wickremesinghe

வங்கியின் முன்னால் விழுந்து கிடந்த ரூபா 50 இலட்சம் : பின்னர் நடந்த சம்பவம்

வங்கியின் முன்னால் விழுந்து கிடந்த ரூபா 50 இலட்சம் : பின்னர் நடந்த சம்பவம்

தமிழ் தலைவர்கள் 

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், “எமது தமிழ் தலைவர்கள் முன்னெடுத்த போராட்டங்கள் தோல்விகண்ட நிலையில் தான் அன்றைய காலகட்டத்தில் எங்களுடைய கைகளில் ஒரு ஆயுதப் போராட்டம் வலிந்து கொடுக்கப்பட்டது.

ஆனால் அந்த ஆயுத போராட்டமும் ஒரு கட்டத்துக்கு பிறகு திசை திரும்பி பலவீனப்பட்டு போய்விட்டது இவ்வாறு பலவீனப்பட்டு போய்க்கொண்டிருந்த பொழுதுதான் 1987 களில் இலங்கை – இந்திய ஒப்பந்தம் என்ற ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்தது.

அதை நாங்கள் பின்பற்றி இருப்போமாக இருந்தால் இன்று நாம் பல மடங்கு முன்னேற்றகரமான ஒரு சூழலில் வாழ்ந்து கொண்டிருந்திருப்போம் என்று நினைக்கின்றேன். ஆனால் அது வீணடிக்கப்பட்டுவிட்டது.

ரணிலால் தீர்வினைக் காண முடியும்: டக்ளஸ் நம்பிக்கை (படங்கள்) | All Problems Can Be Solved By Ranil Wickremesinghe

அதிபர்த் தேர்தல் 

நாட்டில் நடைபெற்ற அழிவு யுத்தம் காரணமாக தேவையற்ற பொருளாதார செலவுகள் மற்றும் யுத்தத்துக்காக வெளிநாடுகளில் பெற்ற கடன்களும் அதைவிட நாட்டினுடைய ஏனைய தேவைகளுக்காக பெறப்பட்ட கடன்களும் சரியான ஒரு பொறிமுறையை நோக்கி கையாளப்படாது போய்விட்டது.

இதனால் நாட்டை முன் கொண்டு செல்ல முடியாத நிலைக்கு எமது நாடு தள்ளப்பட்டது. இவ்வாறான நெருக்கடி நிறைந்த காலகட்டத்தில் இந்த நாட்டை பொறுப்பெடுத்த இன்றைய அதிபர் ரணில் விக்ரமசிங்க நாட்டை சரியான பாதையில் கொண்டு சென்று நிலமைகளை சீர்செய்து வருகின்றார்.

அதில் வெற்றியும் கிடைத்துள்ளது அந்தவகையில் விரைவில் ஒரு அதிபர்த் தேர்தல் நடைபெறவுள்ளது.

அதில் இன்றைய அதிபர் வெற்றி பெறுவாராக இருந்தால் அடுத்த ஐந்து வருடத்தில் நாடு இன்னும் பல மடங்கு முன்னோக்கி செல்லும் என்பது என்னுடைய நம்பிக்கை. பொதுவாக நான் என்னுடைய அனுபவங்களை என்னுடைய நம்பிக்கையை தான் எப்பொழுதும் வெளிப்படுத்த வருகின்றேன்.

கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை

கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை

தீராப் பிரச்சினை

என்னுடைய வரலாற்றை எடுத்துக்கொண்டால் ஏறக்குறைய 15 வருட ஆயுதப் போராட்ட வரலாறும் 30 வருடத்துக்கு மேலான நாடாளுமன்ற ஜனநாயக அரசியல் வரலாறும் அதனூடான அனுபவங்களும் எனக்கு இருக்கின்றது இதேநேரம் அடுத்த அரசாங்கங்கள் வந்தாலும் என்னுடைய நிலைமை இவ்வாறானதாகவே இருக்கும்.

அத்துடன் எனது அணுகுமுறையானது வெறுமனே உசுப்பேற்றும் அரசியலை பேசுவதுடன் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை தீராப் பிரச்சினைகளாக வைத்திருந்து வெறும் வாக்குககளை அபகரிப்பதற்கான அரசியல் இல்லை.

நான் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டுடனே நல்லிணக்கத்தை வளர்த்து வருகின்றேன்.

அதில் வெற்றி காணமுடியும் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு என்றும் தெரிவித்த அமைச்சர் இந்த பாடசாலையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான அனைத்து செயற்பாடுகளிலும் பாடசாலை சமூகத்துடன் சேர்ந்து தன்னுடைய பங்களிப்பும் முழுமையாக கிடைக்கப்பெறும்'' என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

கனடாவில் குடியேற அரிய வாய்ப்பு: 60000 பேருக்கு நிரந்தர குடியிருப்பு

கனடாவில் குடியேற அரிய வாய்ப்பு: 60000 பேருக்கு நிரந்தர குடியிருப்பு

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025