தேங்காய் எண்ணெய் விற்பனை தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை :பறந்தது கடிதம்

Consumer Protection Coconut price
By Sumithiran Jul 28, 2025 01:53 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் (NCMRP), தென்னை அபிவிருத்தி சபையின் (CDB) தலைவரிடம், சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் கலப்பட தேங்காய் எண்ணெயை விற்பனை செய்யும் மோசடியைத் தடுக்க, சந்தையில் போத்தல் மற்றும் லேபிள் கொண்ட தேங்காய் எண்ணெயை மட்டுமே விற்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தது.

நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்க(NCMRP) தலைவர் ரஞ்சித் விதானகே,தென்னை அபிவிருத்தி சபை தலைவருக்கு எழுதிய கடிதத்தில், இந்த மோசடி நீண்ட காலமாக கட்டுப்படுத்தப்படாமல் தொடர்கிறது என்றும், தனது அமைப்பு அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களுக்கு பலமுறை புகார் அளித்தும், எந்த பலனும் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

புற்றுநோய்க்கு வழிவகுத்துள்ள கலப்பட தேங்காய் எண்ணெய்

கலப்பட தேங்காய் எண்ணெயின் பயன்பாடு புற்றுநோய்க்கு வழிவகுத்துள்ளது என்றும், சுகாதார அதிகாரிகள் அதனுடன் தொடர்புடைய சுகாதார அபாயங்களை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தேங்காய் எண்ணெய் விற்பனை தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை :பறந்தது கடிதம் | Allow Only Bottled Coconut Oil

 “தேங்காய் எண்ணெய் வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், இந்த மோசடியைத் தடுக்க சந்தையில் போத்தல் மற்றும் லேபிள் கொண்ட தேங்காய் எண்ணெயை மட்டுமே அனுமதிப்பதற்கும் அமைச்சரவை எடுத்த முடிவை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். இந்த அவசர பிரச்சினைக்கு பதிலளிக்கும் விதமாக அரசாங்கம் எடுத்த நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது,” என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

 தேங்காய் எண்ணெய் ஆலை உரிமையாளர்கள்

இருப்பினும், மோசடிக்கு காரணமான பல தேங்காய் எண்ணெய் ஆலை உரிமையாளர்கள் இந்த திட்டத்தை செயல்படுத்துவதை எதிர்த்ததாக விதானகே குறிப்பிட்டார்.

தேங்காய் எண்ணெய் விற்பனை தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை :பறந்தது கடிதம் | Allow Only Bottled Coconut Oil

"அவர்களின் எதிர்ப்பு பொதுமக்களின் கருத்தை பிரதிபலிக்கவில்லை என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.

அமைச்சரவை முடிவை செயல்படுத்துவதை விரைவுபடுத்துமாறு CDB தலைவரை அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

பிரபல பாடசாலையில் போதையில் தள்ளாடிய மாணவிகள்

பிரபல பாடசாலையில் போதையில் தள்ளாடிய மாணவிகள்

இந்தியாவைச் சேர்ந்த இருவர் கட்டுநாயக்காவில் கைது

இந்தியாவைச் சேர்ந்த இருவர் கட்டுநாயக்காவில் கைது

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

 

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019