ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவு : அரசிடம் கோரிக்கை விடுத்துள்ள ரவிகரன் எம்.பி

Northern Province of Sri Lanka Pensioner Associations Thurairajah Raviharan
By Sathangani Mar 21, 2025 08:15 AM GMT
Report

2016 முதல் 2019 வரையான காலப்பகுதியில் ஓய்வுபெற்றவர்களுக்கான கொடுப்பனவுகளை வெகு விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் (T. Raviharan) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் குறித்த கொடுப்பனவு பெற வேண்டியவர்களில் 2000 பேர் அளவில் இறந்து விட்டதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இன்றைய (21.03.2025) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “வடமாகாண ஓய்வூதியர் உரிமைகளைப் பேணிப் பாதுகாக்கும் அமைப்பு தங்களுக்குரிய குறைகளை  தெரிவித்துள்ளனர்.

அதாவது 2016 - 2019 வரை ஓய்வு பெற்றவர்களுக்கு 2020.01.01 இல் வழங்குவதற்குரிய ஓய்வூதியமானது நாட்டின் நிலைமை காரணமாக கோட்டாபய அமைச்சரவையினால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக தேசிய மக்கள் சக்தி சார்பான ஓய்வூதியர் சங்கத்தினர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளதுடன் ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்து வந்தனர்.

இப்போது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அப்போது அவ்வாறு போராடிய தேசிய மக்கள் சக்தி ஆதரவு தொழிற்சங்கங்கள் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்தால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என நம்பிக்கையூட்டி வந்தனர்.

2016 -2019 பாதிக்கப்பட்ட ஓய்வூதியர்கள் தேசிய மக்கள் சக்தியின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் இதற்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தனர்.

2020 இல் கிடைக்க வேண்டிய கொடுப்பனவு 2025 வரை ஐந்தாண்டுகளாக காத்திருந்தவர்களுக்கு அந்தக் கொடுப்பனவு மூன்று கட்டங்களாக 2027 வரை வழங்க கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.

இக்கொடுப்பனவு பெற வேண்டியவர்களில் 2000 பேர் அளவில் இறந்து விட்டனர். இந்த நிலையில் தற்போதைய அரசும் ஓய்வூதியர் வாழ்வுக் காலம் பற்றிச் சிந்திக்காது கொடுப்பனவை வழங்குவதை மேலும் மூன்றாண்டுகளுக்கு பிற்போடுவதாக அவர்கள் கவலையடைகின்றனர்.

இந்த நிலையில் அந்தக் கொடுப்பனவுகளை வெகு விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரையும் சபாநாயகரையும் கேட்டுக்கொள்கின்றேன்” என தெரிவித்தார்.


பதவி விலகவில்லை..! காவல்துறை ஊடகபேச்சாளர் அதிரடி

பதவி விலகவில்லை..! காவல்துறை ஊடகபேச்சாளர் அதிரடி

தேசபந்துவை அடுத்து இன்று நீதிமன்றில் சரணடைந்த அறுவர்

தேசபந்துவை அடுத்து இன்று நீதிமன்றில் சரணடைந்த அறுவர்

நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் பதற்றம்

நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் பதற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024