வெளிநாடொன்றில் ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளான சரக்கு விமானம் : 5 பேர் பலி
அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு விலகி தீப்பிடித்ததில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் தீவிர சிகிச்சைப்பிரிவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
புவேர்ட்டோ ரிக்கோவின் சான் ஜுவான் நகரிலிருந்து பயணித்த குறித்த சரக்கு விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகி, அருகிலிருந்த களஞ்சியக் கட்டிடத் தொகுதிகள் மற்றும் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பல வாகனங்களுடன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐவர் பலி
இதன்போது அங்கிருந்த வாகனங்களிலும் தீப்பற்றி விபத்துக்குள்ளாகியுள்ளது.

எனினும், உயிரிழந்த 5 பேரும் விமானத்தில் பயணித்தவர்களா அல்லது விபத்துக்குள்ளான வாகனங்களில் இருந்தவர்களா என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
மேலும் 200க்கும் மேற்பட்ட அவசரக்கால பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22