அச்சுறுத்தும் எல்நினோ - யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
யாழ்ப்பாணம் மாவட்டங்களில் வாழும் பொதுமக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இன்று பிற்பகல் 4.00 மணி முதல் நாளை பிற்பகல் 4.00 மணி வரை கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மொனராகலை மாவட்டங்களில் பகல் நேரத்தில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு இயல்பை விட அதிகரித்து, எச்சரிக்கை மட்டத்தை எட்டக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (24-08-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான வெயில்
இதனால் போதுமான அளவு நீர் மற்றும் திரவ உணவுகளை அருந்துமாரும் கடுமையான வெயில் வேளையில் வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைத்துக் கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறிப்பாக முதியவர்கள், சிறுவர்கள் மற்றும் நோயாளிகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்துமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, தற்போது 81,000க்கும் அதிகமான மக்கள் குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர்.
குடிநீர் தட்டுப்பாடு
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு நீர் தாங்கிகள் (Bowsers) மூலம் நீர் விநியோகிக்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த வறட்சியான காலநிலையினால் மொனராகலை மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் 33,023 பேர் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 28,523 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 8,783 பேரும் மற்றும் பதுளை மாவட்டத்தில் 7,876 பேர் உட்பட மொத்தம் 81,865 பேர் இந்த குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8