ட்ரம்பின் அதிரடி மிரட்டல்கள்: அமெரிக்கர்களின் எண்ணத்தில் ஏற்படுத்தியுள்ள மாற்றம்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் (Donald Trump) மிரட்டல்களை தொடர்ந்து அமெரிக்கர்கள் கனேடிய குடியுரிமை பெற விரும்புவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியானதிலிருந்தே சில நாடுகளுடன் வர்த்தகப்போரில் ஈடுபட துவங்கியுள்ளார்.
அத்துடன், கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக மிரட்டல்களையும் விடுத்துள்ளார்.
அமெரிக்கர்களில் கருத்து
இவ்வாறான நிலையில் அமெரிக்கர்களில் சிலர், தாங்கள் கனேடிய குடியுரிமை பெற விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய ஆய்வொன்றில், அமெரிக்கர்கள் கனடாவுக்குச் சென்று கனேடிய குடியுரிமை பெற விரும்புவது தெரியவந்துள்ளது.
அந்தவகையில், அமெரிக்கர்களில் ஐந்தில் ஒருவர் தாங்கள் கனேடியர்களாக ஆக விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.
ஆய்வில் வெளியான உண்மை
குறித்த ஆய்வில் பங்கேற்ற அமெரிக்கர்களில் 20 சதவிகிதத்தினர், தங்கள் மாகாணத்தைக் கனடாவுடன் இணைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், வெறும் 9 சதவிகிதம் அமெரிக்கர்கள் மட்டுமே கனடா அமெரிக்காவுடன் இணைக்கப்படலாம் என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 1 வாரம் முன்
