கட்டுநாயக்காவில் தரையிறங்கிய அமெரிக்க பிரஜை கைது
ரூ.100 கோடி மதிப்புள்ள "குஷ்" போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த அமெரிக்க(us) பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டார்.
விமான நிலைய வருகை முனையத்தில் உள்ள வணிகப் பாதையான சிவப்பு பாதை வழியாக விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்றபோது, சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் நேற்று (04/15) காலை கைது செய்யப்பட்டார்.
இலங்கையில் நில வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அமெரிக்கர்
இந்த 31 வயதான அமெரிக்க நாட்டவர், நாட்டில் நில வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
அவர் நேற்று காலை 10.15 மணிக்கு தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-403 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவர் கொண்டு வந்த சூட்கேஸில் 23 கிலோகிராம் குஷ்
அவர் கொண்டு வந்த சூட்கேஸில் 23 கிலோகிராம் இருந்த "குஷ்" போதைப்பொருள் ஒவ்வொன்றும் 1 கிலோகிராம் கொண்ட 23 பைக்கெட்டுகளில் மறைத்து வைத்திருந்தார்.
இந்த நிகழ்வைக் காண சுங்க பணிப்பாளர் ஜெனரல் சரத் நோனிஸ் மற்றும் சுங்க ஊடகப் பேச்சாளரும் கூடுதல் சுங்க பணிப்பாளர் ஜெனரலுமான சீவலி அருக்கொட ஆகியோரும் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
"குஷ்" போன்ற போதைப்பொருட்கள் இப்போது தாய்லாந்தில்(thailand) சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளதால், அத்தகைய போதைப்பொருட்களை நாட்டின் திறந்த சந்தையில் எளிதாகக் காணலாம்.
எனவே, தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அதிக அளவில் "குஷ், ஹாஷிஷ் மற்றும் கொக்கெயின்" போன்ற போதைப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படும் போக்கு அதிகரித்து வருவதாக சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
