சட்டவிரோத போதைப்பொருளுடன் பிக்கு உட்பட இருவர் கைது
பாடசாலை ஒன்றில் பௌத்த மதம் கற்பிக்கும் பிக்கு மற்றும் அவருடன் பயணித்த சாரதி ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காலி மாவட்டத்தின் ஊரகஸ்மன்ஹந்திய காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அலுத்கம முதல் எல்பிட்டிய நோக்கிச் சென்ற காரை சோதனையிட்டபோது பிக்குவிடம் இருந்த 1,315 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், சாரதியிடம் இருந்த 1,305 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட பிக்கு, களுத்துறை தெற்கு, பொம்புவலா பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வசிக்கும் 39 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிக்கு கைது
குறித்த பிக்கு, கடந்த ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதியும் 1,305 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் வீரவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சாரதி நவதகல ஹிப்பன்கந்த பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் எனவும், அவர் சலூன் ஒன்றை நடத்தி வருபவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயயம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகள மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! ' |