வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச் சந்நிதியானின் தீர்த்தோற்சவம் இன்று!
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் தீர்த்தத் திருவிழா இன்றாகும்.
முருகப்பெருமானுக்கு இன்று (27) காலை முதல் விசேட பூசைகள் இடம்பெறுகின்ற நிலையில் இதனைத் தொடர்ந்து ஆலயத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள தொண்டைமானாறு கடலேரி முகத்துவாரப் பகுதியில் முருகப்பெருமானுக்கு தீர்த்தோற்சவம் நடைபெறும்.
அத்துடன் இன்றைய நாளில் ஏராளமான பக்த அடியார்கள் கலந்துகொண்டு தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா கடந்த 13ஆம் திகதி அதிகாலை 1:45 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இந்தநிலையில் நேற்று (27) பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ தேர்திருவிழா இடம்பெற்ற நிலையில் இன்று (28) தீர்த்தத் திருவிழா இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12