ஆண்ட்ரூ கைது விவகாரம்: வாரிசு வரிசையிலிருந்து நீக்க சட்ட நடவடிக்கை தீவிரம்
ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சரை அரச குடும்பத்திலிருந்து முழுமையாக நீக்கப்படும் முயற்சிகளை பக்கிங்ஹாம் அரண்மனை எதிர்க்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரை வாரிசு வரிசையிலிருந்து நீக்க புதிய சட்டம் கொண்டு வரப்பட்டால், மன்னர் அரசர் மூன்றாம் சார்லஸ் அதற்கு தடையாக நிற்கமாட்டார் என சுட்டிக்காட்டிப்படுகிறது.
66வது பிறந்தநாளன்று கைது செய்யப்பட்ட ஆண்ட்ரூ, பொதுப் பணியில் தவறான நடத்தை செய்ததாக சந்தேகிக்கப்படுகிறார்.
விசாரணை
இதில் Thames Valley காவல்துறை அவரை 11 மணி நேரம் விசாரித்து. பின்னர் விசாரணையின் கீழ் விடுவித்தது.

விண்ட்சரில் உள்ள அவரது முன்னாள் இல்லமான ரோயல் லொட்ஜிலும், நோர்போக்கில் உள்ள சாண்ட்ரிங்ஹாம் தோட்ட வீடிலும் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஆவணங்களின் பின்னணியில் இந்த கைது இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
இதில் குழந்தை பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடனான தொடர்புகள் மற்றும் இரகசிய தகவல் பகிர்வு குறித்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
2019ஆம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் அவர் அளித்த சர்ச்சையான நேர்காணலுக்குப் பிறகு, அரச குடும்பப் பொறுப்புகளில் இருந்து விலகினார்.
வாரிசு வரிசை
ஆண்ட்ரூ தற்போது வாரிசு வரிசையில் எட்டாவது இடத்தில் உள்ளார். அவரை அந்த வரிசையிலிருந்து நீக்க புதிய சட்டம் அவசியம்.

அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரபுக்களின் ஆதரவு, மன்னரின் அரச ஒப்புதல், மன்னர் தலைவராக உள்ள 14 பொதுநலவாய நாடுகளின் ஒப்புதல் அனைத்தும் தேவைப்படும்.
1647ஆம் ஆண்டு ஆங்கில உள்நாட்டுப் போரின்போது கைது செய்யப்பட்ட Charles Iற்கு பிறகு கைது செய்யப்பட்ட முதல் அரச குடும்ப உறுப்பினராக ஆண்ட்ரூ கருதப்படுகிறார்.
இதன்படி விசாரணை தொடர்பில் மேலும் தகவல்கள் வெளியாகும் நிலையில், அரசியல் மற்றும் சட்ட ரீதியான மாற்றங்கள் குறித்த விவாதங்கள் பிரித்தானியாவில் தீவிரமடைந்துள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |