திருமண நிகழ்வுகளை நடத்தலாமா? பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விடுத்துள்ள அறிவிப்பு
Ajith Rohana
Wedding
SriLanka
By Chanakyan
பதிவுத் திருமணத்தை நடத்துவதாயின், சம்பந்தப்பட்டவர்களின் வீட்டில் அதனை நடத்த அனுமதி வழங்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிக் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண
தனிமைப்படுத்தல் உத்தரவுகள் குறித்து விளக்கமளிக்கும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
இதன்போது, மணமகன் மற்றும் மணமகள் ஆகியோருடன், அவர்களின் பெற்றோர்களும், பதிவாளரும், சாட்சியாளர்கள் இருவரும் பங்கேற்க முடியும்.
இதனைத் தவிர்த்து வேறு எவருக்கும் இதன்போது பங்கேற்க அனுமதி இல்லை.
இதேநேரம், இன்று முதல் தனிமைப்படுத்தல் உத்தரவை மிகவும் கடுமையாக அமுலாக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுள்ளனர்
எனவே, அனைவரும் அதற்கமைய செயற்படுவார்கள் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி