காசாவில் உக்கிர மோதல்! வெள்ளை மாளிகை விடுத்துள்ள அறிவிப்பு
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான ஒரு தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான வன்முறைச் சம்பவங்கள் விரைவில் முடிவடையும் என்று தான் நம்புவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வைத்து நேற்றுப் புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
எனது எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இந்த வன்முறை விரைவில் முடிவடைய வேண்டும் என்பது, ஆனால் கசா வன்முறை அதிகரிக்கும் போது இஸ்ரேலுக்கு தன்னை தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு.
பைடன் வன்முறைச் சம்பவங்கள் நிறைவடையும் என்ற அவரது நம்பிக்கையின் பின்னணியில் உள்ள காரணங்களை இதன்போது விளக்கவில்லை. தனது தேசிய பாதுகாப்புக் குழு இஸ்ரேல், எகிப்து, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் உள்ளவர்களுடன் அடிக்கடி தொடர்புகொண்டு மோதலுக்குத் தீர்வு காண முயற்சிகின்றோம்.
ஹமாஸ் ஆட்சி செய்யும் காசா பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் மற்றும் ஹமாஸ் படைகளுக்கு இடையே கடுமையான மோதல்கள் 2014ஆம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் இப்பகுதியை குழப்புவதற்கான மிகக் கடுமையான போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு ஒருங்கிணைந்த இராஜதந்திர உந்துதலைத் தூண்டியுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.