இராணுவத்திற்காக வீதியில் இறங்கிய இளைஞர் - யுவதிகள் : இந்தியாவில் பரபரப்பு

Pakistan India World
By Shalini Balachandran May 10, 2025 10:37 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

இந்திய (India) இராணுவ வீரர்களுக்கு உதவுவதற்கு தயார் என தெரிவித்து சண்டிகரில் இளைஞர்கள் ஏராளமானோர் குவிந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இராணுவத்தில் தன்னார்வலராக பணியாற்ற 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் தேவை என அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்தே இவ்வாறு இளைஞர்கள் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த இளைஞர்களுக்கான பயிற்சி முகாம் இன்று இரவு 10.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகளால் தமிழ் தலைமைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மறைமுக எச்சரிக்கை

தேர்தல் முடிவுகளால் தமிழ் தலைமைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மறைமுக எச்சரிக்கை

பயங்கரவாதிகள் 

பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது.

இதில், ஒன்பது பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் அழித்து ஒழிக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி  இந்திய குடியிருப்பு பகுதிகளில் தாக்குதலை நடத்தியது.

இராணுவத்திற்காக வீதியில் இறங்கிய இளைஞர் - யுவதிகள் : இந்தியாவில் பரபரப்பு | Announcement To Join The Indian Army

பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் பதிலடி தாக்குதலை தொடுத்து வருகின்ற நிலையில், இந்திய இராணுவத்துக்கான ஆதரவு சேவைகளை அளிக்கும் பகுதி நேர தன்னார்வலர்களை உறுப்பினர்களாக கொண்ட இராணுவ ரிசர்வ் படையாக டெரிடோரியல் ஆர்மி எனப்படும் பிராந்திய இராணுவம் செயல்படுகின்றது.

இந்தநிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பிராந்திய இராணுவத்தினரை உதவிக்கு அழைத்துக்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் : இலங்கைக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் : இலங்கைக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

முழு அதிகாரம்

இதற்கான முழு அதிகாரமும் இந்திய இராணுவ தளபதிக்கு வழங்கப்பட்டுள்ள  நிலையில், இந்திய இராணுவ வீரர்களுக்கு உதவ தயார் எனக் கூறி சண்டிகரில் இளைஞர்கள் குவிந்துள்ளனர்.

சண்டிகர் துணை ஆணையர் நிஷாந்த் குமார் நேற்று (09) இரவு தமது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில் இவ்வாறு இளைஞர்கள் மற்றும் யுவதிகள் திரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவத்திற்காக வீதியில் இறங்கிய இளைஞர் - யுவதிகள் : இந்தியாவில் பரபரப்பு | Announcement To Join The Indian Army

குறித்த பதிவில், 18 வயதுக்கு மேற்பட்டோர் தன்னார்வலர்களாக சிவில் பாதுகாப்பு படையில் சேருமாறும், ஆர்வமுள்ளவர்கள் இன்று காலை பத்து மணிக்கு தாகூர் தியேட்டருக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இவ்வாறு இளைஞர்கள் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கான பயிற்சி முகாம் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மே மாத முதல் வாரத்தில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலா பயணிகள்

மே மாத முதல் வாரத்தில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலா பயணிகள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்